ஏப்ரல் 2024 புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் (Quarterly Peer Reviewed International Tamiloogy Journal) விக்கிமூலத்தில் புறநானூற்றுத் தரவு மேம்பாடு எனும் தலைப்பிலான எங்களது கட்டுரை வெளியாகியுள்ளது. புலம் ஆய்விதழ் பதிப்பாசிரியர், நிறுவனர் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.
வரையறுக்கா பாசத்தையும் வறுமையறியா வாழ்வையும் தந்தாய். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் - நீ விட்டுச்சென்ற அக்கறைகள்தான் என் முன்னே நடை போடுகின்றன. கல்யாணி சேது
தடம் மாறாதீர் எத்தனையோ காக்கிகள் இருந்தாலும் காக்கி என்றதும் நினைவிற்கு வருவது காவல்துறையே ... கண்ணியமிகு காவல் துறை கடமைமிகு காவல்துறை காவலன் உங்கள் நண்பன் என்பது ஒருபுறம். பொய் வழக்கு... ஏமாற்றம்... என்கவுண்டர்... அடித்துப் பறித்தல்... லஞ்சம்... அதிகாரத் திமிர்... என்பது மறுபுறம். சில காவலர்கள் செய்யும் தவறு காவல் துறைக்கே களங்கம் உண்டாக்குகிறது. குற்றங்களைக் களைக்கும் - நீங்கள் குற்றம் புரியலாமா? "காவலன் என்றும் மக்கள் நண்பன்" எனும் குரல் எங்கும் ஒலிக்கச் செய்யுங்கள். தடம் மாறாதீர்கள் மனிதத்தை நேசியுங்கள்.
Comments
Post a Comment